Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 5, Verse 2

ஶ்ரீப13வானுவாச1 |

ஸன்யாஸ: க1ர்மயோக3ஶ்ச1 நி: ஶ்ரேயஸக1ராவுபௌ4 |

1யோஸ்து11ர்மஸன்யாஸாத்11ர்மயோகோ3 விஶிஷ்யதே1 ||2||

ஶ்ரீ-பகவான் உவாச--—ஒப்புயர்வற்ற பகவான் கூறினார்; ஸன்யாஸஹ----பற்றற்றிருத்தல்; கர்ம-யோகஹ----பக்தியில் வேலை செய்தல்; ச—--மற்றும்; நிஹ்-ஶ்ரேயஸ-கரௌ-—உயர்ந்த குறிக்கோளுக்கு வழிவகுக்கும்; உபௌ—இரண்டும்; தயோஹோ--—இரண்டில்; து—--ஆனால்; கர்ம-ஸன்யாஸாத்--—செயல்களைத் துறத்தல்; கர்ம---யோகஹ---பக்தியில் வேலை செய்தல்; விஶிஷ்யதே--—மேலானது

Translation

BG 5.2: ஒப்புயர்வற்ற பகவான் கூறினார். கர்ம ஸந்யாஸம் (செயல்களைத் துறத்தல்) மற்றும் கர்ம யோகம் (செயல் யோகம்) இரண்டும் இறுதி இலக்கை நோக்கி இட்டுச் செல்கின்றன, ஆனால் கர்ம ஸன்யாஸத்தை விட கர்ம யோகம் மேலானது.

Commentary

இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் செயல்களை துறப்பதை (கர்ம ஸந்நியாஸத்தை) செயல்களை செய்வதற்கான செயல் யோகத்துடன் (கர்ம யோகத்துடன்) ஒப்பிட்டுள்ளார். இது மிகவும் ஆழமான வசனம். எனவே, அதில் ஒவ்வொரு வார்த்தையை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு கர்மயோகி தனது ஆன்மீக மற்றும் சமூக கடமைகளை செய்பவர். மனம் இறைவனுடன் இணைந்திருக்கும் போது சமூகப் பொறுப்புகள் உடலால் செய்யப்படுகின்றன. ஜகத்குரு க்ருபாலுஜி மஹராஜ் கூறுகிறார்:

ஸோசு1 மன யஹ க1ர்ம் மம ஸப3 லக21 ஹரி கு3ரு ப்1யாரே

(ஸாத4ன் ப4க்1தி 11த்1வ)

‘அன்பு உடையவர்களே! உங்கள் செயல்கள் அனைத்தும் கடவுள் மற்றும் குருவால் கவனிக்கப்படுகிறது என்று எப்போதும் நினைத்துக் கொள்ளுங்கள்.' இது கர்ம யோகத்தின் பயிற்சியாகும், இதன் மூலம் நாம் உடல் உணர்விலிருந்து ஆன்மீக உணர்வுக்கு படிப்படியாக நம்மை உயர்த்துகிறோம்.

கர்ம ஸ்ன்யாஸம் (செயல்களைத் துறத்தல்) என்பது உடல் தளத்திற்கு அப்பால் ஏற்கனவே உயர்ந்துள்ள உயர்ந்த ஆன்மாக்களுக்கானது. ஒரு கர்மஸன்யாஸீ கடவுளில் முழுமையாக ஈர்க்கப்படுவதால் சமூக கடமைகளை நிராகரித்து ஆன்மீக கடமைகளை (கடவுளுக்கு பக்தி சேவை) செய்வதில் முழுமையாக ஈடுபடுபவர். கர்ம ஸன்யாஸீயின் இந்த உணர்வை பகவான் ராமர் அவரை உலகக் கடமைகளை நிறைவேற்றும்படி கேட்டபோது லக்ஷ்மணன் அழகாக வெளிப்படுத்தினார்:

மோரே ஸப3யி ஏக1 து1ம்ஹ ஸ்வாமீ, தீ 3னபந்து4 உர அந்த1ரயாமீ,

(ராமாயணம்)

லட்சுமணன் ஸ்ரீ ராமரிடம், 'நீங்கள்தான் என் எஜமான், அப்பா, அம்மா, நண்பன், எல்லாமே. நான் உங்களிடம் மட்டுமே என் கடமையை என் முழு வலிமையுடன் நிறைவேற்றுவேன். எனவே தயவு செய்து என் பொருள் உலக கடமைகளைப் பற்றி ஒன்றும் கூறாதீர்கள்.’ என்று கூறினார்.

கர்ம ஸன்யாஸங்களைச் செய்பவர்கள் (செயல்களைத் துறப்பவர்கள்) தங்களை உடலாகக் கருதுவதில்லை, இதன் விளைவாக, அவர்கள் தங்கள் உடல் கடமைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. அத்தகைய கர்ம ஸன்யாஸிகள் தங்கள் முழு நேரத்தையும் ஆற்றலையும் ஆன்மீகத்திற்காக அர்ப்பணிக்கிறார்கள், அதே நேரத்தில் கர்ம யோகிகள் தங்கள் நேரத்தை உலக மற்றும் ஆன்மீக கடமைகளுக்கு இடையில் பிரிக்க வேண்டும் கர்ம யோகிகள் சமூகக் கடமைகளில் சிக்கியிருக்கும் போது, ​​கர்ம ஸன்யாஸிகள்-கடவுளை நோக்கி மிக வேகமாக முன்னேற முடியும்.

இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் கர்ம ஸந்நியாஸங்களைக் (செயல்களைத் துறப்பதை) காட்டிலும் கர்ம யோகத்தை புகழ்ந்து அர்ஜுனனை இந்த உயர்ந்த பாதையில் செல்ல ஊக்குவிக்கிறார். கர்ம ஸன்யாஸீகள், தங்கள் செயல்களைத் துறந்த பிறகும், அவர்களின் மனம் இறைவனில் முழுமையாக ஈடுபடவில்லை என்றால், அவர்கள் இங்கேயும் இல்லாத அங்கேயும் இல்லாத ஒரு இடர்பாட்டை சந்திப்பார்கள். இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான பற்றின்மைப் பெற்ற ஸாதுக்கள் உலகத்தை விட்டு வெளியேறினர், ஆனால் அவர்களால் அவர்களின் மனதை கடவுளிடம் இணைக்க முடியவில்லை. இதன் விளைவாக, ஆன்மீக பாதையில் இருந்து வரும் இறுதி ஆனந்தத்தை அவர்களால் அனுபவிக்க முடியவில்லை. அவர்கள் ஸாதகர்கள் போல் காவி சோலை அணிந்தாலும், உண்மையில் அவர்கள் கஞ்சா புகைப்பது போன்ற அனைத்து வகையான பாவத் தவறுகளிலும் ஈடுபடுகிறார்கள். அறியாதவர்கள் தங்கள் செயலற்ற தன்மையை உலகத்திலிருந்து பற்றின்மையாகப் பார்ப்பதில் தவறு செய்கிறார்கள்.

மறுபுறம், கர்ம யோகிகள் மதச்சார்பற்ற மற்றும் மத கடமைகளை செய்கிறார்கள். ஆன்மிகத்தில் இருந்து விலகி விட்டாலும் அவர்களின் மனம், குறைந்த பட்சம் தங்கள் உலகப் பணியைச் செய்ய விருப்பம் கொண்டுள்ளது. எனவே கர்ம யோகம் என்பது சாமானியனுக்கு எளிதான வழி, அதேசமயம் கர்ம ஸன்யாஸத்தை தகுதியான குருவின் வழிகாட்டுதலின் கீழ் பின்பற்றலாம்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
5. கர்ம ஸன்யாஸ யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!